Monday, March 29, 2004

வனிதா


Oscar விருது பெற்ற தமிழ் பெண்

மனித மாமிசத்தை சாப்பிடும் பயங்கரமான ராட்சஸன். பச்சை நிரத்தில், மலையைப் போன்ற உடம்புடன்... பார்கையில் மனிதன் போலவே கோப தாபங்களுடன் சுற்றிக் கொண்டிருப்பார். தன்னுடைய சின்னஞ்சிறிய காட்டில் அமைதியாக வாழ்ந்துக் கொண்டிருந்தான். ஆனால் அந்த ராட்சஸனுக்கு பூணை, எலித் தொல்லை அதிகமானது. அந்த எலித் தொல்லையிலிரந்து தப்பிக்க வேண்டுமென்றால் ஒரு கோட்டையை எழுப்ப வேண்டும். அந்த வேலையை தொடங்கும்போது, அடுக்கடுக்காய் பல பொறுப்புகள் வந்து தலையில் விழுந்தன. கடைசியில் ஒரு ராஜகுமாரியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் வந்த விட்டது.

பார்ப்பதற்கு ராட்சஸன் ஆனாலும், அவனுடைய மனம் இளகியதென்று காட்டிய படம்தான் அன்மையில் யானிமேஷன் பிரிவில் ‘ஆஸ்கர்’ விருதைப் பெற்ற ‘‘ஷ்ரெக்’’. உலகளவில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. யானிமேஷன் துறையில் புதிய தொழில் நுட்பங்களுடன் புதிய சாதனைகளை படைத்த ‘ஷ்ரெக்’ படத்தின் வெற்றியில் ஒரு தமிழ் பெண்ணுக்கு பங்குண்டு என்பதை பலருக்கு தெரியாது. அந்த ‘ஆஸ்கர்’ தமிழ் பெண்தான் வனிதா ரங்கராஜன்.

தமிழ்நாடு திருச்சியில் பிறந்த வனிதா, திருச்சி ரீஜினல் இன்ஜினீயரிங் கல்லூரியில் ஆர்க்கிடெக்சர் படித்தார். அப்புறம் வேலைத் தேடி பெங்களூர் போனவருக்கு ரமணன் அறிமுகம் கிடைத்தது. அதுவே காதலாக மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது. ரமணனும் ஒரு இன்ஜினீயர்தான். ஆர்கிடெக்சரை படித்த வனிதா 95ல் ஒருநாள் தற்செயலாக `Toy Story’ படத்தை தயாரித்த விதத்தை தொலைக்-காட்சியில் பார்க்க நேர்ந்தது. அந்த நிகழ்ச்சி வனிதாவின் வாழ்க்கை பயணத்தையே மாற்றிவிட்டது. அவர் அர்கிடெக்சரை மறந்து முழு நேரம் யானிமேஷன் கற்றுக் கொள்ள தொடங்கினார்.

இதற்கிடையில் கணவர் ரமணன் மேற்படிப்பிற்காக அமெரிக்க செல்ல வேண்டிய சந்தர்ப்பம் வந்ததால், வனிதா, அந்த வாய்ப்பை தனக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். அங்கு ‘‘இன்டஸ்ட்ரியல் லைட் மேஜிக்’’கில் விஜூவல் எஃபெக்ட்ஸ் படிப்பை முடித்தார். உடனே அவருக்கு பசிபிக் டேட்டா இமேஜெஸில் வேலை கிடைத்தது. அப்புறம் ‘‘ட்ரீம் வொர்க்ஸ்’’

‘‘ட்ரீம் வொர்க்ஸ்’’ கம்பெனியில், திரையில் தோன்றும் ஒவ்வொரு ப்ரேமிற்க்கும் ஒளியைக் கொடுப்பது வனிதாவின் வேலை. எந்த மாதிரி ஒளி எந்த உணர்ச்சியை உண்டாக்கும். எங்கு ஒளி இருந்தால் காட்சி நன்றாக அமையும். முகத்தில் ஒளியை எப்படி பிரதிபலிக்கச் செய்யலாம். நிழல்கள் எப்படி இருக்கவேண்டுமென்பவை’’ லைட்டிங் டெக்னிகல் டைரெக்-டரி’’ன் கடைமைகள். ப்ரேமில் தோன்ற கூடிய இரவு, பகல், தூசு, காற்று, அக்னி... இப்படி எல்லாமே ஒரு சவால்தான். ஆனால் இரவு பகல் பார்க்காமல் கம்ப்யூட்டர்களுடன் மல்யுத்தம் செய்து, தன்னிடம் ஒப்படைத்த பணியை செவ்வனே முடித்தார் வனிதா. இதற்கு தொழில் நுட்பம் மட்டும் போதாது. கலை உணர்ச்சி, இருக்க வேண்டும். வனிதாவிடம் அது நிறையவே இருக்கிறது. ‘ஷ்ரெக்’ படம் ஒரு யானிமேஷன் படமாக மட்டுமின்றி தொழில் நுட்பத்தில ரிக்கார்ட்களை பதிவு செய்தது. இந்த படத்தில் வழக்காம கையில் வளரவதை விட்டுட்டு முழுதும் கம்ப்யூட்டரின் உதவியால்தான் வரைந்தனர். 300 செயற்கை சதைகளுடன் ‘ஷ்ரெக்’ முகத்தில், தமக்கு வேண்டிய உணர்ச்சியை பிரதிபலிக்க செய்தது ஒரு சாதனை. இப்படத்தில் தோன்றும் செடி, கொடி, மரங்களில் ஒவ்வொரு இலையும் அசையும். தூசு பறக்கும். ‘ஷ்ரெக்’ படத்தை பார்த்தவர்கள் ‘‘அந்த படத்தில் ஒவ்வொரு காட்சியில் நாங்கள் இருக்கின்ற மாதிரி பாவித்தோம்’’ என்று புகழாரம் சூட்டினாரென்றால் வனிதாவின் குழு செய்த அற்புதத்தை உணரமுடிகிறது.

லாஸ் ஏன்ஜெல்ஸில் ‘ஆஸ்கர்’ விருது விழா நடந்துக் கொண்டிருக்கும்போது, வனிதா தன்னுடைய சக ஊழியர்களுடன் காலிபோர்னியா பாலோ ஆல்டோ ஸ்போர்ட்ஸ் களப்பில் அவ்விழாவின் நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருந்தார். தங்களுடைய படத்துக்கு விருது கிடைக்குமோ... கிடைக்காதோ என்ற பயம். கடைசியில் பட தயாரிப்பாளர் யாரன் வார்னர் மேடையை ஏறி விருது பெற்றுக்கொள்ளும்போது வனிதா-வின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஒரு இந்திய பெண்ணாக தானும் ஆஸ்கர் விருது பெற்ற குழுவில் இருப்பது தனக்கு கிடைத்த பாக்கியமாக அவர் பெருமைப்-பட்டார். திருச்சியிலுள்ள வனிதாவின் பெற்றோருக்கு அளவிலா மகிழ்ச்சி. அவர்கள் தம்முடைய நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள்.

‘‘6 வருடங்களுக்கு முன் இந்தியா-வில் இருந்து தொலை காட்சியில் ஆஸ்கர் விருது விழாவை பார்த்த நான், இன்று எங்க ஸ்டூடியோவில் ஆஸ்கர் விருதை கையில் பிடித்து நின்றதை பற்றி யோசிக்கும் போது... அற்புதமாக இருக்கிறது’’ என்று சொல்லும் வனிதா, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், இதுவரை ‘க்ரீன் கார்ட்’ வாங்க-வில்லை. ஏன் என்று கேட்டால் ‘‘என்றென்றுக்கும் நான் திருச்சிக்காரி’’ என்று சொல்கிறார்.

தற்போது வனிதா ‘ஷ்ரெக் 2’ வேலைகளில் மும்முரமாக இருக்-கிறார். அந்தப் படம் இவ்-வருடம் ஜூலை மாதம் வெளிவரப் போகிறதாம்’ அப்போ 2005_லும் வனிதாவுக்கு மற்றொரு ஆஸ்கார் காத்துக் கொண்டிருக்கிறது.

nantri - kumutham