Monday, March 29, 2004

வனிதா


Oscar விருது பெற்ற தமிழ் பெண்

மனித மாமிசத்தை சாப்பிடும் பயங்கரமான ராட்சஸன். பச்சை நிரத்தில், மலையைப் போன்ற உடம்புடன்... பார்கையில் மனிதன் போலவே கோப தாபங்களுடன் சுற்றிக் கொண்டிருப்பார். தன்னுடைய சின்னஞ்சிறிய காட்டில் அமைதியாக வாழ்ந்துக் கொண்டிருந்தான். ஆனால் அந்த ராட்சஸனுக்கு பூணை, எலித் தொல்லை அதிகமானது. அந்த எலித் தொல்லையிலிரந்து தப்பிக்க வேண்டுமென்றால் ஒரு கோட்டையை எழுப்ப வேண்டும். அந்த வேலையை தொடங்கும்போது, அடுக்கடுக்காய் பல பொறுப்புகள் வந்து தலையில் விழுந்தன. கடைசியில் ஒரு ராஜகுமாரியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் வந்த விட்டது.

பார்ப்பதற்கு ராட்சஸன் ஆனாலும், அவனுடைய மனம் இளகியதென்று காட்டிய படம்தான் அன்மையில் யானிமேஷன் பிரிவில் ‘ஆஸ்கர்’ விருதைப் பெற்ற ‘‘ஷ்ரெக்’’. உலகளவில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. யானிமேஷன் துறையில் புதிய தொழில் நுட்பங்களுடன் புதிய சாதனைகளை படைத்த ‘ஷ்ரெக்’ படத்தின் வெற்றியில் ஒரு தமிழ் பெண்ணுக்கு பங்குண்டு என்பதை பலருக்கு தெரியாது. அந்த ‘ஆஸ்கர்’ தமிழ் பெண்தான் வனிதா ரங்கராஜன்.

தமிழ்நாடு திருச்சியில் பிறந்த வனிதா, திருச்சி ரீஜினல் இன்ஜினீயரிங் கல்லூரியில் ஆர்க்கிடெக்சர் படித்தார். அப்புறம் வேலைத் தேடி பெங்களூர் போனவருக்கு ரமணன் அறிமுகம் கிடைத்தது. அதுவே காதலாக மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது. ரமணனும் ஒரு இன்ஜினீயர்தான். ஆர்கிடெக்சரை படித்த வனிதா 95ல் ஒருநாள் தற்செயலாக `Toy Story’ படத்தை தயாரித்த விதத்தை தொலைக்-காட்சியில் பார்க்க நேர்ந்தது. அந்த நிகழ்ச்சி வனிதாவின் வாழ்க்கை பயணத்தையே மாற்றிவிட்டது. அவர் அர்கிடெக்சரை மறந்து முழு நேரம் யானிமேஷன் கற்றுக் கொள்ள தொடங்கினார்.

இதற்கிடையில் கணவர் ரமணன் மேற்படிப்பிற்காக அமெரிக்க செல்ல வேண்டிய சந்தர்ப்பம் வந்ததால், வனிதா, அந்த வாய்ப்பை தனக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். அங்கு ‘‘இன்டஸ்ட்ரியல் லைட் மேஜிக்’’கில் விஜூவல் எஃபெக்ட்ஸ் படிப்பை முடித்தார். உடனே அவருக்கு பசிபிக் டேட்டா இமேஜெஸில் வேலை கிடைத்தது. அப்புறம் ‘‘ட்ரீம் வொர்க்ஸ்’’

‘‘ட்ரீம் வொர்க்ஸ்’’ கம்பெனியில், திரையில் தோன்றும் ஒவ்வொரு ப்ரேமிற்க்கும் ஒளியைக் கொடுப்பது வனிதாவின் வேலை. எந்த மாதிரி ஒளி எந்த உணர்ச்சியை உண்டாக்கும். எங்கு ஒளி இருந்தால் காட்சி நன்றாக அமையும். முகத்தில் ஒளியை எப்படி பிரதிபலிக்கச் செய்யலாம். நிழல்கள் எப்படி இருக்கவேண்டுமென்பவை’’ லைட்டிங் டெக்னிகல் டைரெக்-டரி’’ன் கடைமைகள். ப்ரேமில் தோன்ற கூடிய இரவு, பகல், தூசு, காற்று, அக்னி... இப்படி எல்லாமே ஒரு சவால்தான். ஆனால் இரவு பகல் பார்க்காமல் கம்ப்யூட்டர்களுடன் மல்யுத்தம் செய்து, தன்னிடம் ஒப்படைத்த பணியை செவ்வனே முடித்தார் வனிதா. இதற்கு தொழில் நுட்பம் மட்டும் போதாது. கலை உணர்ச்சி, இருக்க வேண்டும். வனிதாவிடம் அது நிறையவே இருக்கிறது. ‘ஷ்ரெக்’ படம் ஒரு யானிமேஷன் படமாக மட்டுமின்றி தொழில் நுட்பத்தில ரிக்கார்ட்களை பதிவு செய்தது. இந்த படத்தில் வழக்காம கையில் வளரவதை விட்டுட்டு முழுதும் கம்ப்யூட்டரின் உதவியால்தான் வரைந்தனர். 300 செயற்கை சதைகளுடன் ‘ஷ்ரெக்’ முகத்தில், தமக்கு வேண்டிய உணர்ச்சியை பிரதிபலிக்க செய்தது ஒரு சாதனை. இப்படத்தில் தோன்றும் செடி, கொடி, மரங்களில் ஒவ்வொரு இலையும் அசையும். தூசு பறக்கும். ‘ஷ்ரெக்’ படத்தை பார்த்தவர்கள் ‘‘அந்த படத்தில் ஒவ்வொரு காட்சியில் நாங்கள் இருக்கின்ற மாதிரி பாவித்தோம்’’ என்று புகழாரம் சூட்டினாரென்றால் வனிதாவின் குழு செய்த அற்புதத்தை உணரமுடிகிறது.

லாஸ் ஏன்ஜெல்ஸில் ‘ஆஸ்கர்’ விருது விழா நடந்துக் கொண்டிருக்கும்போது, வனிதா தன்னுடைய சக ஊழியர்களுடன் காலிபோர்னியா பாலோ ஆல்டோ ஸ்போர்ட்ஸ் களப்பில் அவ்விழாவின் நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருந்தார். தங்களுடைய படத்துக்கு விருது கிடைக்குமோ... கிடைக்காதோ என்ற பயம். கடைசியில் பட தயாரிப்பாளர் யாரன் வார்னர் மேடையை ஏறி விருது பெற்றுக்கொள்ளும்போது வனிதா-வின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஒரு இந்திய பெண்ணாக தானும் ஆஸ்கர் விருது பெற்ற குழுவில் இருப்பது தனக்கு கிடைத்த பாக்கியமாக அவர் பெருமைப்-பட்டார். திருச்சியிலுள்ள வனிதாவின் பெற்றோருக்கு அளவிலா மகிழ்ச்சி. அவர்கள் தம்முடைய நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள்.

‘‘6 வருடங்களுக்கு முன் இந்தியா-வில் இருந்து தொலை காட்சியில் ஆஸ்கர் விருது விழாவை பார்த்த நான், இன்று எங்க ஸ்டூடியோவில் ஆஸ்கர் விருதை கையில் பிடித்து நின்றதை பற்றி யோசிக்கும் போது... அற்புதமாக இருக்கிறது’’ என்று சொல்லும் வனிதா, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், இதுவரை ‘க்ரீன் கார்ட்’ வாங்க-வில்லை. ஏன் என்று கேட்டால் ‘‘என்றென்றுக்கும் நான் திருச்சிக்காரி’’ என்று சொல்கிறார்.

தற்போது வனிதா ‘ஷ்ரெக் 2’ வேலைகளில் மும்முரமாக இருக்-கிறார். அந்தப் படம் இவ்-வருடம் ஜூலை மாதம் வெளிவரப் போகிறதாம்’ அப்போ 2005_லும் வனிதாவுக்கு மற்றொரு ஆஸ்கார் காத்துக் கொண்டிருக்கிறது.

nantri - kumutham

Sunday, March 21, 2004

பத்மாவதி நாக கனக ஸ்ரீவல்லி

இழந்ததைப் பற்றிக் கவலை வேண்டாம். நடக்கிறதைப் பார்!


அந்த ஆறு வயதுக் குழந்தை மாடியின் மேல் விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அவளின் கை மின் கம்பத்தின் வயர்களின் மேல் பட்டது. கணத்தில் ஒரு கை, இரண்டு கால்கள் எரிந்து கறுகிப் போயின. பெற்றோர் அவளை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாலும் பலன் இல்லாமல் போனது. இரண்டு கால், ஒரு கையைப் பறிகொடுத்து வீடு திரும்பிய அவளுக்கு பெற்றோர் தன்னம்பிக்கை ஊற்றி வளர்க்கத் தொடங்கினார்கள். அதனால்தான் உடல் ஊனமுற்றாலும் வைராக்யம் கொண்ட மனதுடன் வாழ்க்கையில் பல வெற்றிகளைக் குவிக்கிறார் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சார்ந்த இருபத்து இரண்டு வயதுள்ள துடிப்புமிக்கப் பெண் பத்மாவதி நாக கனக ஸ்ரீவல்லி.

ஆம். அன்றைய ஆறு வயதுக் குழந்தை, தற்போது ஒரு கையினால் கம்ப்யூட்டரில் கீபோர்டில் மடமடவென்று டைப் செய்வாள். கால்கள் இல்லையென்றாலும் செயற்கை உறுப்புகளை அமர்த்தி பள்ளிக்கு அனுப்பினார் பத்மாவதியின் தந்தை மல்லிகார்ஜுன ராவ். “இழந்ததைப் பற்றிக் கவலை வேண்டாம். இருக்கிறதை வைத்து எப்படிச் சிறப்பாகச் செயல்பட முடியுமென்பது பற்றி யோசி” என்று எங்க அப்பா அடிக்கடிச் சொல்வாரென்று சொல்லும் பத்மாவதி, தந்தையின் சொல்லே வேத வாக்காக செயல்பட்டு பட்டப்படிப்பை முடித்தார். அப்புறம் தன்னுடைய தோழிகளில் பல பேர் கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டிருக்க தானும் கற்றுக்கொள்ள முயன்றார் பத்மாவதி. இதைப் பார்த்து சில பேர் கேலி செய்ததுண்டு. ஆனால் சாஃப்ட்வேர் லாங்வேஜ்ஜைக் கற்றுக்கொண்ட பத்மாவதி, ஹார்ட்வேரையும் கற்றுக்கொள்கிறார்.

இதற்கிடையில் பத்மாவதி ஹோம் கார்ட் வேலைக்கு விண்ணப்பித்தார். எல்லாத் தகுதிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டதால் அவருக்கு வேலை கிடைத்தது. தற்போது பத்மாவதி விஜயவாடா போலீஸ் கண்ட்ரோல் ரூமில் டிராபிக் பிரிவு கம்ப்யூட்டர் செக்ஷனில் வேலை பார்க்கிறார். படு சுறுசுறுப்பாக இருக்கும் பத்மாவதியைப் பார்த்து சக ஊழியர்கள் “தன்னம்பிக்கையின் முழு உருவம்தான் பத்மாவதி” என்று புகழ்கிறார்கள். விடைபெறும்போது “என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டதற்கு “எங்கப்பா சொன்னதுதான். இழந்ததைப் பற்றிக் கவலை வேண்டாம். நடக்கிறதைப் பார்” என்று சொன்னார் பத்மாவதி.

- மூர்த்தி -
Quelle - Kumudham

Sunday, March 07, 2004

நசீம் பானு!


பாரதம் தந்த புதுமைப் பெண்!

ஒரு தாயின் கண் முன்னாலேயே அவளது வயது வந்த 13 வயது மகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு உயிருடன் எரித்துப் படுகொலை செய்யப்பட்டால் எப்படியிருக்கும்? மகளது மானத்தைக் காப்பாற்ற முனைந்த அவளது அன்புக் கணவனைக் கண் முன்னாலேயே படுகொலை செய்ததோடு மட்டுமல்ல அவளது மாமா, மாமி என அவளது உறவினர்கள் 24 பேரைப் படுகொலை செய்து ஆற்றினுள் வீசினால் எப்படியிருக்கும்? உங்களில் பலருக்கு 1983இல் நடைபெற்ற இலங்கை இனக்கலவரத்தின் நினைவு உடனடியாக ஞாபகத்தில் வரும். இது போன்ற பல நிகழ்வுகள் அக்கலவரத்தில் நடைபெற்று இலங்கை அரசியல் வரலாற்றினையே அடியோடு மாற்றி வைத்து விட்டன. ஆனால் அது போன்ற பயங்கர நிகழ்வுகளை இந்தத் தாய் இரு வருடங்களுக்கு முன்னர் கோத்ராவில் முஸ்லீம் வெறியர்களால் இந்துக்கள் பயணித்த புகையிரதம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் இந்து வெறியர்களால் அப்பாவி முஸ்லீம் மக்கள் மேல் ஏவி விடப்பட்ட இனக்கலவரத்தில் அனுபவித்திருக்கின்றாள். இன்று இவளுக்குகென்றிருக்கும் உறவுகள் இவளது 13 வயது மகனும், மைத்துனியொருத்தியுமே. இந்தப் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது இவள் ஆஸ்பத்திரியிலிருந்ததால் உயிர் தப்பித்துக் கொண்டாள். ஆனால் ஆஸ்பத்திரியிலிருந்த இவளைப் பார்ப்பதற்காக வந்த இவளது உறவினர்களில் மைத்துனியொருத்தியைத் தவிர அனைவரும் இந்து வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த அப்பாவியான மைத்துனியோ பலரால் பலர் முன்னிலையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, ஆற்றில் தூக்கி வீசப்பட்டாள். இன்று அவள் பிழைத்திருந்தாலும் நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றாள். இவ்வளவும் நடந்து முடிந்திருக்கின்றது குஹராத்தைச் சேர்ந்த நசீம் பானுவின் வாழ்வில்.

இவ்வளவு நடந்தும் நசீம்பானு தன் துணிவினை இழந்துவிடவில்லை. இன்று அவள் நடந்து முடிந்த கொடும் செயல்களுக்காக நீதி வேண்டித் தனது போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றாள். இந்தப் படுகொலைகளுக்குக் காரணமான சமூக விரோதிகளைச் சட்டம் தண்டிக்கும் வரையில் இவளது போராட்டம் ஓய்ந்து விடப்போவதில்லை. படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் வெளியில் சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருக்கும் பொழுது அரசாங்கம் வருத்தம் தெரிவிப்பதால் எந்தவிதப் பயனுமில்லை. சட்டத்தின் தண்டிப்புக்குப் பின்னால் மட்டுமே அரசின் வருத்தத்துக்கு அர்த்தமிருக்க முடியும் எனக் கூறும் நசீம் பானு இன்று பாரதத்தின் நீதிமன்றத்தில் நம்பிக்கை வைத்து நீதியினை நாடி வழக்குத் தொடர்ந்திருக்கின்றாள். இவள் தனது வழக்கினை வாபஸ் பெறாவிட்டால் இவளது மகனைக் கடத்தப் போவதாகச் சமூகவிரோதிகள் மிரட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நசீம் பானு தன் உறுதியினை இழந்து விடவில்லை. அவளால் இழப்பதற்கு இனியென்ன இருக்க முடியும்? தனக்கு நீதி கிடைக்குக் வரையில் தான் ஓய்ந்து விடப்போவதில்லை என்று வைராக்கியத்துடன் இருக்கும் நசீம் பானு கடந்த இரு வருடங்களாக பெண்களுக்காகப் பாடுபடும் அரசு சார்பற்ற , இலாப நோக்கற்று இயங்கும் ஸ்தாபனமொன்றில் இணைந்து பாதிக்கப் பட்ட பெண்களின் உரிமைக் குரலாக விளங்கி வருகின்றாள். இவளது போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். ஏனெனில் தர்மத்துக்காக நடைபெறும் போராட்டங்கள் இறுதியில் என்றுமே வெற்றியினைத் தான் அடைந்து விடுகின்றன என்பதுதான் வரலாறு நமக்குக் கூறும் பாடம்!

நந்திவர்மன்
மூலம்: இந்து
nantri - Pathivukal