Monday, November 10, 2014

நடின் கோர்­டிமர் (Nadien Gordimer)

Monday, 10 November 2014 06:56 சிறு­கதை படைப்­பி­லக்­கி­யத்­துக்கு நோபல் பரிசு வென்று உல­கப்­பு­கழ்­பெற்ற கனே­டிய எழுத்­தாளர் அலிஸ் மன்றோ போன்று நாவல் இலக்­கி­யத்­துக்கு நோபல் பரிசு வென்று புகழ்­பூத்­தவர் தென்­னா­பி­ரிக்க எழுத்­தா­ள­ரான நடின் கோர்­டிமர் (Nadien Gordimer)

படைப்­பி­லக்­கி­யத்­தோடு மட்டும் தமது சிந்­த­னை­யையும் ஆற்­ற­லையும் செயற்­பா­டு­க­ளையும் மட்­டுப்­ப­டுத்திக் கொள்­ளாமல் அதற்­கப்பால் அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளிலும் சமூக அபி­வி­ருத்தி விட­யங்­க­ளிலும் காட்­டிய ஊக்கம் அபா­ர­மா­னது.

ஆளும் வெள்­ளையர் வர்க்­கத்தில் பிறந்­தவர் சகல சுக­போ­கங்­க­ளுடன் எழுத்தை ஒரு பொழு­துப்­போக்­காக கொள்­ளக்­கூ­டிய ஒரு தரா­த­ரத்தில் இருந்த ஒரு பெண் படைப்­பாளி தனது இனத்து அதி­கார வர்க்­கத்­தினர் உதைத்து நசுக்­கிய ஆபி­ரிக்க கறுப்­பின மக்கள் மீது கொண்ட இரக்கம் போற்­றத்­தக்­கது. அதுவே அவ­ரது எழுத்தின் பிரத்­தி­யட்சம் மனி­தா­பி­மா­னத்தின் அடிப்­ப­டையில் அமைந்த எழுத்துச் சிற்­பங்­களே நடின் கோர்­டிமருக்கு 1991 ஆம் ஆண்டு இலக்­கி­யத்­துக்­கான நோபல் பரிசை வென்று தந்­தன என்றால் மிகை­யில்லை. இந்த எழுத்து சிற்பி கடந்த ஜூலை 13ஆம் திகதி (2014) தமது தொண்­ணூ­றா­வது வயதில் அம­ர­ரான செய்தி உலகம் அறிந்­ததே.

தென்­னா­பி­ரிக்­காவில் வெள்­ளையர் ஆட்சி நடை­பெற்ற கால­கட்­டத்தில் சுதேச கறுப்பு இன­மக்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட பல்­வேறு இன ஒதுக்கல் முகங்­க­ளையும் தாம் படைத்த 15 நாவல்கள், பல சிறு­க­தைத்­தொகுதி, கட்­டுரை நூல்கள் மற்றும் படைப்­புக்கள் மூலம் அவர் வெளிக்­கொ­ணர்ந்தார். தென்­னா­பி­ரிக்­காவின் கலா­சாரம் அதன் மக்கள் ஜன­நா­ய­கத்­துக்­கான அவர்­க­ளது போராட்டம் ஆகி­ய­வற்றின் மீது அவர் செலுத்­திய கவனம் மிக­மிக ஆழ­மா­னது. நோபல் பரிசை வென்­றதும் 1980களில் தேசத்­து­ரோக குற்­றஞ்­சாட்­டப்­பட்ட இன ஒதுக்கல் கொள்­கை­க­ளுக்கு எதி­ரா­கப்­போ­ரா­டி­ய­வர்­க­ளுக்கு ஆத­ர­வா­கத்தாம் செயற்­பட்ட காலத்­தையும் அவர் தமது வாழ்வின் மிகப்­பெ­ரு­மி­த­மான கால­மாக கரு­தினர் என்ற அவ­ரது குடும்­பத்­த­வரின் கூற்று குறிப்­பி­டத்­தக்­கது.

படைப்­பி­லக்­கி­யத்­துக்கு அப்பால் ஒரு தீவிர அர­சியல் சமூக செயற் ­பாட்­டாளர்

அடக்கி, ஒடுக்கி ஆளப்­பட்ட கறுப்­பின மக்கள் மீது கோர்­டிமர் மிக்க அனு­தாபம் கொண்டு போரா­டி­ய­தற்கு காரணம் என்ன? அதற்கு விடை அவ­ரது வாழ்வின் பின்­ன­ணியில் இருந்­தது என்றே கூறலாம்.

கோர்­டிமர் ஜோஹானாஸ்பர்க் பேர்க்­கிற்கு வெளியே கோடெங் நகரில் ஸ்பிரிங்ஸ் என்னும் இடத்­திற்கு அண்­மை­யான இடத்தில் 1922ஆம் ஆண்டு பிறந்தார். இவ­ரது தந்­தையார் இலிடேர் கோர்­டிமர் ரஷ்­யாவில் இருந்து வந்த ஒரு யூத குடி­யேற்­ற­வாசி அவ­ரது தாயார் ஹன்னா நான் (Nan) லண்­டனைச் சேர்ந்­தவர். அவர் யூத பரம்­ப­ரையைச் சேர்ந்த ஒரு குடும்­பத்தை சேர்ந்­தவர்.

தென்­னா­பி­ரிக்­காவில் நில­விய இன மற்றும் பொரு­ளா­தார ஏற்­றத்­தாழ்வு இடங்­களில் கோர்­டிமர் கொண்­டி­ருந்த அக்­க­றையை தூண்­டி­ய­வர்கள் அவ­ரது பெற்­றோர்­களே. ஸாரின் ரஷ்ய ஆட்­சியில் ஓர் அக­தி­யாக அவ­ரது தகப்­பனார் பெற்ற அனு­பவம் அவ­ரது அர­சியல் அடை­யா­ளத்தை உரு­வாக்க உத­வி­யது. ஆனால் அவர் ஓர் அர­சியல் நட­வ­டிக்­கை­யா­கவோ அல்­லது கறுப்­பின மக்­கள்­மீது அனு­தாபம் கொண்ட ஒரு­வ­ரா­கவோ இருக்­க­வில்லை. ஆனால், அவ­ரது தாயார் தென்­னா­பி­ரிக்க மக்­களின் வறுமை நிலை மற்றும் அவர்­க­ளுக்கு எதி­ராக காட்­டப்­பட்டு வந்த பார­பட்சம் ஆகி­ய­வற்றில் அனு­தாபம் கொண்­ட­வ­ராக இருந்தார். அதன் கார­ண­மாக கறுப்­பினப் பிள்­ளை­க­ளுக்கு உதவும் நட­வ­டிக்­கையில் ஈடு­பாடு கொண்­டிருந்தார்.இதுவே கோர்­டி­ம­ரையும் இந் நட­வ­டிக்­கை­க­ளுக்கு தூண்­டு­வ­தாக இருந்­தது.

மேலும், அவர் வளர் இளம் பரு­வத்­தி­லி­ருந்த காலத்தில் அவ­ரது வீட்­டினை முற்­று­கை­யிட்ட பொலிஸார் கறுப்பு பணி­யாளர் ஒரு­வரின் அறைக்குள் நுழைந்து அவ­ரது கடி­தங்கள் மற்றும் தினக்­கு­றிப்பு புத்தகத்தையும் கைப் பற்றிச் சென்­றதை நேர­டி­யாகப் பார்த்தவர்.

கத்­தோ­லிக்க கன்­னியர் மட பாட­சாலை ஒன்றில் கோர்­டிமர் கல்வி கற்றார். இருப்­பினும் அவ­ரது தாயார் அவரை பெரும்­பாலும் வெளியில் செல்­லா­த­வாறு வீட்­டி­லேயே தங்­க­வைத்தார். அதற்கு காரணம் அவ­ரது இரு­தயம் பல­வீ­ன­மாக இருந்­தது எனக்­கா­ரணம் கூறி­வந்­தாராம்.

தனி­யாக பெரும்­பாலும் வீட்­டுக்குள் அடைபட்டு கிடந்த கோர்­டிமர் கதைகள் எழுத ஆரம்­பித்தார். 1937ஆம் ஆண்டு அவ­ரது 15ஆவது வய­தி­லேயே அவ­ரது சிறு­க­தை எழுத்து ஆரம்­ப­மா­னது . அவை சிறு­வர்­க­ளுக்­கான கதைகள். தமது 16ஆவது வய­தி­லேயே வாழ்ந்­தோ­ருக்­கான அவ­ரது படைப்பு பிர­சுரம் கண்­டது.

விற்­வாட்­டர்ஸ்ரான்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஒரு­வ­ருட காலம் படித்தார் எனினும் பட்ட படிப்பை பூர்த்தி செய்­ய­வில்லை. 1948ஆம் ஆண்டு ஜோஹா­னாஸ்பர்க் சென்­றவர் பின்னர் அங்கே தங்­கி­யி­ருந்தார். வகுப்­புக்கள் எடுத்து கல்வி கற்­பித்­தவர் தொடர்ந்தும் கதை­களை எழு­தினார். அவை பெரும்­பாலும் உள்ளூர் தென்­னா­பி­ரிக்க சஞ்­சி­கை­களில் பிர­சு­ர­மா­கின. இச்­சி­று­க­தை­களில் பல தொகுக்­கப்­பட்டு Face To Face (நேருக்கு நேர் )என்னும் பெயரில் 1947 இல் பிர­சு­ரிக்­கப்­பட்­டது.

1951இல் நியூயோக்கர் பத்­தி­ரிகை இவர் எழு­திய ஏ வாட்சர் ஒவ் த டெட் என்ற கதையை ஏற்றுப் பிர­சு­ரித்­தது. இதன் மூலம் இவர் பர­வ­லாக பொது­மக்­களால் அறி­யப்­பட்ட ஒரு எழுத்­தா­ள­ராவார்.

இக்­கா­ல­கட்­டத்­துக்­கு­ரிய பொருத்­த­மான இலக்­கிய வடிவம் சிறு­க­தைதான் என நம்­பிய இந்த எழுத்­தாளர், ”நியூ­யோக்கர்” மற்றும் முன்­னணி இலக்­கிய சஞ்­சி­கை­க­ளிலும் சிறு­க­தை­களைத் தொடர்ந்து எழு­தினார்.

இவ­ரது முத­லா­வது பிர­சுர கர்த்தர் லுலு பிறீட்மன், எம்.பி.யான பேர்னாட் பிறிட்­மனின் மனை­வி­யாவார். அவர்­க­ளது வீட்­டில்தான் கோர்டிமர் இன ஒதுக்கல் கொள்­கை­க­ளுக்கு எதி­ரான சில எழுத்­தா­ளர்­களைச் சந்­தித்­தி­ருந்தார்.

கோர்­டி­மரின் முத­லா­வது நாவலான ”தி லையிங் டேயிஸ்” 1953ஆம் ஆண்டு நூலாகப் பிர­சு­ரிக்­கப்­பட்­டது.

1949ஆம் ஆண்டு ஜெரால்ட் காவ்றன் என்ற பல் வைத்­தி­யரை மணம்­பு­ரிந்தார். இத்­தி­ரு­ம­ணத்தின் பய­னாக ஒறியன் என்னும் பெய­ருள்ள மகள் பிறந்தாள் (1950). மூன்று வரு­டத்தின் பின் இம்­மண வாழ்வு முறிந்­தது. 1954இல் இவர் றீன்ஹோல்ட் கஸ்ஸிறர் என்­ப­வரைத் திரு­மணம் புரிந்தார். இவர் மிகவும் மதிப்­புப்­பெற்ற ஓவிய வியா­பா­ரி­யாவார். இம்­மண வாழ்க்கை கஸ்ஸிறர் 2001ஆம் ஆண்டு நோய்­கண்டு இறக்­கும்­வரை நீடித்­தது. இத்­தி­ரு­ம­ணத்தின் மூலம் ஹூகோ என்ற புத்­திரன் பிறந்தான் (1955). இவர் நியூ­யோர்க்கில் திரைப்­படத் தயா­ரிப்­பா­ள­ராக உள்ளார். கோர்டிமர் தனது மக­னுடன் இணைந்து ஆகக் குறைந்­தது இரண்டு ஆவ­ணப்­ப­டங்­களைத் தயா­ரித்­தி­ருக்­கிறார்.

இன ஒதுக்கல் கொள்­கை­க­ளுக்கு எதி­ரான இயக்­கத்தில் கோர்­டிமர் பங்கு கொள்­வ­தற்கு அவ­ரது நெருங்­கிய நண்பர் பெற்றி டு ரொயிற் கைது செய்­யப்­பட்­ட­மையும், ஷார்ப்­வில்லி படு­கொ­லை­களும் கார­ண­மாக அமைந்­தன. அதன் பின்னர் அவ­ரது நட­வ­டிக்­கைகள் தீவி­ர­ம­டைந்­தது. நெல்சன் மண்­டே­லாவின் வழக்கு விசா­ரணை 1962ஆம் ஆண்டு நடை­பெற்ற காலத்தில் அவ­ரது சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் இவரது நட்­பு­றவு நெருக்­க­மான ஒன்­றாக இருந்­தது.

இந்த வழக்கு விசா­ர­ணையின் போது நெல்சன் மண்­டேலா, பிர­தி­வாதிக் கைதிக்­கூண்டில் நின்று ”சாகத்­த­யா­ராக இருக்­கிறேன்” என ஆற்­றிய உரை மிகப் பிர­ப­ல­மா­னது. அந்த உரையை அவர் செம்­மைப்­ப­டுத்­து­வ­தற்கு கோர்டி­மரும் உதவி புரிந்தார். 1990ஆம் ஆண்டில் நெல்சன் மன்­டேலா சிறையில் இருந்து விடு­த­லை­யாகி வெளி­வந்­த­போது அவர் முதன்­மு­தலில் சந்திக்க விரும்­பிய ஆட்­களில் ஒரு­வ­ராக கோர்­டி­மரும் இருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

1960, 1970களில் இவர் ஜோஹ­ானஸ்­பேர்க்கில் வாழ்ந்­தி­ருந்த காலத்தில் அவர் அமெ­ரிக்கா பல்­க­லைக்­க­ழ­கங்­களில் அவ்­வப்­போது கற்­பித்­தலை மேற்­கொண்டார். அக்­கா­லத்தில் சர்­வ­தேச இலக்­கிய அங்­கீ­கா­ரத்தைப் பெற ஆரம்­பித்தார். 1961ஆம் ஆண்டில் அவ­ருக்கு முத­லா­வது பிர­தா­ன­மான விருது ஒன்று கிடைத்­தது.

அக்­கா­ல­கட்­டத்தில் தென்­னா­பி­ரிக்க அர­சாங்கம், இந்த எழுத்­தா­ள­ரது சில நாவல் படைப்­பு­களை சில காலம் தடை செய்­தது.

ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் தென்­னா­பி­ரிக்க அர­சினால் சட்­ட­வி­ரோ­த­மா­ன­தென தடை செய்­யப்­பட்­டி­ருந்த காலத்­தி­லேயே கோர்­டிமர், அதில் அங்­கத்­த­வ­ராகச் சேர்ந்­தி­ருந்தார். தென்­னா­பி­ரிக்க கறுப்­பின மக்­க­ளுக்கு விடிவைத் தேடித்­தரக் கூடி­யது ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரஸ்தான் என கோர்­டிமர் பூர­ண­மாக நம்­பினார்.

கோர்­டி­மரின் இலக்­கியப் படைப்­பு­க­ளுக்குப் பெரும் மதிப்பும், பெறு­ம­தி­மிக்க விரு­து­களும் பரி­சு­களும் பின்னர் கிடைத்த நிலையில் 1991ஆம் ஆண்டு அவ­ருக்கு இலக்­கி­யத்­துக்­காகக் கிடைத்த நோபல் பரிசு, சர்­வ­தேச புகழை அவ­ருக்குப் பெற்­றுக்­கொ­டுத்­தது. அவ­ரது மகத்­தான காப்­பியப் படைப்­புகள் மனித சமு­தா­யத்­துக்கு சிறந்த நன்­மையைப் புரிந்­துள்­ளது” என நோபல் பரிசு தேர்­வுக்­குழு அறிக்கை தெரிவித்தது.

இன ஒதுக்கல் கொள்கைகளுக்கு அப்பால், தென்னாபிரிக்க எழுத்தாளர் காங்கிரஸ் மற்றும் பிரதான இலக்கிய அமைப்புகளில் சேர்ந்து, அரச தணிக்கை நடவடிக்கைகள் மற்றும் அரச தகவல் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு தமது எதிர்ப்பினைக் காட்டினார்.

1990ஆம் தசாப்தம் மற்றும் 21ஆம் நூற்­றாண்டில் தென்­னா­பி­ரிக்­காவில் எச்.ஐ.வி. எயிட்ஸ் இயக்­கத்தில் மும்­மு­ர­மான ஒரு நட­வ­டிக்­கை­யா­ள­ரா­கவும் கோர்­டிமர் விளங்­கினார்.

இத்­த­கை­ய­தொரு உல­கப்­பு­கழ்­பெற்ற எழுத்­தா­ளரும், அர­சியல், சமூக நட­வ­டிக்­கை­யா­ள­ரு­மான நடியா கோர்டிமர் உறு­திப்­பாடும், நம்­பிக்­கையும் அர்த்­த­முள்ள வாழ்க்­கை­யினை வாழ்ந்து, தமது 90ஆவது வயதில் தூக்கத்தின்போது அமரரானார்.

‘மகிழ்ச்சி பல்வேறு அம்சங்களிலும் இருந்து ஏற்படுகின்றது. ஆனால் சுதந்திரமின்றி சந்தோஷம் ஏற்படும் என்று நான் நம்பவில்லை” என்ற அவரது கூற்று மிகுந்த அர்த்தமுள்ளது.

- அன்னலட்சுமி இராஜதுரை
eKuruvi.com
September 23, 2014